:
Breaking News

நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழாவில் CURRENT ELECTRO குழுமத்திற்கு சிறந்த தொழில்துறை சேவைக்கான டாக்டர். அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கரண்ட் எலக்ட்ரோ மெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் தொழிற்சாலைகளில் இயங்கி வரும் அதிவேக சக்தி வாய்ந்த ஏசி மற்றும் டிசி மோட்டார்கள், டீசல் ஜெனரேட்டர்கள், டர்பின் ஜெனரேட்டர்கள், விண்ட் மில் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை மிகத் தரமான வகையில், அனுபவம் நிறைந்த பொறியாளர் குழுவினர் மூலம் பழுது நீக்கி சேவை செய்து வருகின்றனர். அத்துடன் ELECTRO MAGNETIC COILS மற்றும் DISTRIBUTION TRANSFORMERS, INDUSTRIAL PUMPS AND WATER PROJECT PUMPS ஆகியவை குறித்த சர்வீஸ் பணிகளை சிறப்பாக செய்து தருகின்றனர். தங்களது 26 ஆண்டுகால தரமாக சேவைக்காக ஏராளமான சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.  ISO 9001: 2015 QMS சான்றிதழ் மற்றும் ZED GOLD CERTIFICATION சான்றிதழையும் பெற்றுள்ளனர். இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் இதுவரை 2.5 லட்சம் எலக்ட்ரிக் மோட்டார்களை பழுது பார்த்து சாதனை செய்தமைக்காக, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் என்ற விருதை, ஈரோடு JCI அமைப்பு இவர்களுக்கு வழங்கியுள்ளது. தொழிலில் மட்டுமல்லாது, சிறந்த சேவை மனப்பான்மையோடு, கொராணா காலங்களில் ஏராளமான சேவைகள் செய்துள்ள இதன் நிர்வாக இயக்குனர், திரு.பூபதி சிவக்குமார் அவர்களுக்கு நுகர்வோர்  எக்ஸ்பிரஸ்  டாக்டர். அப்துல்கலாம் விருது  வழங்கப்பட்டது. இவ்விருதை பத்ம ஸ்ரீ.டாக்டர்.சக்திவேல், சேவைச் செம்மல் டாக்டர்.திரு.முருகநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன், நிட்மா தலைவர். அகில் ரத்தினசாமி, துணை மேயர் திரு.எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், திருப்பூர் டையர்ஸ் அசோஷியேசன் தலைவர் திரு.காந்திராஜன், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து  வழங்கினர்.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media